Monday, November 3, 2008

உன் திசையில் உலகத் திசை


உன்
கண்களில் உண்டு
எரிமலை

உன்
கைகளில் உண்டு
வல்லமை

அகிலத்தை
அசைக்கும் சக்தி
உன்
வார்த்தைகள்

உன் பின்
இளைஞர் படை திரட்சி
உன்னிலே
வெளிப்படும் பெரும் புரட்சி

சிறை என்ன சிறை
இன்று அது உன்
சின்ன அறை..
மக்கள் சக்தி - உன்
மிகப்பெரிய அறை...
இதய அறை!



மெல்ல எழுந்ததற்கே
இத்தனைக் கைவிலங்கு
பொங்கி நீ எழுந்தால்
சிதறுத் தேங்காயாய்
சிறுமதி ஆட்சியாளர்..

உன் திசை
வெற்றி தரும்
பெரும் திசை!
எல்லா திசையினரும்
தேடி வருவார்கள்
ஒருநாள்
உன் திசை...

விண்ணும் மண்ணும்
உன்
சிங்க மடியில்
வெற்றி மலர்களை இறைக்கும்

உனக்காக
வெற்றிப் பல்லக்கு
சுமந்திருக்கிறோம்

மனித உரிமைப் போராட்டச்
சுமைக் கூட
சுகம் தரும் சுமை!

No comments: